பிக்பாஸ் வீட்டில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது ஏன்? மோகன் வைத்தியா விளக்கம்


பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அங்கிருந்த பெண்களுக்கு ஏன் முத்தம் கொடுத்தேன் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மோகன் வைத்தியா விளக்கம் அளித்துள்ளார்.

போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் மோகன் வைத்தியா. அங்கிருக்கும் மீரா, அபிராமி, சாக்‌ஷி உள்ளிட்ட பலரையும் கட்டிப்பிடித்து அவர் முத்தம் கொடுப்பதை பழக்கமாக கொண்டிருந்தார். இதை கிண்லடித்து மீம்ஸ்களும் வெளிவந்தன.

இதன் காரணமாகவே ரசிகர்களின் அதிருப்தியை பெற்ற அவர் குறைவான வாக்குகளை பெற்று கடந்த ஞாயிறு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், இதுபற்றி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்த அவர் ‘என் வீட்டில் நான் 3 சகோதர்களுடன் பிறந்தேன். சகோதரிகள் இல்லை. எனவே, பொதுவாகவே பெண்கள் மீது என் அன்பை காட்டவே கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை நான் பழக்கமாக கொண்டுள்ளேன்.

அதில், பலரையும் என் மகளாகவே பார்க்கிறேன். தவறான எண்ணம் ஏதுமில்லை. 46 வருடங்கள் நான் இசை துறையில் இருக்கிறேன். பல பெண்களுக்கு பாடல் பாட சொல்லி கொடுத்திருக்கிறேன். உண்மையில் நான் மோசமானவாக இருந்தால் என் பெயர் கெட்டுப் போயிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.-Source: cinereporters

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!