பிக்பாஸ் வீட்டில் மைக்கை கழட்டித் தூக்கி எறிந்த வனிதாவுக்கு தண்டனை கிடைக்குமா..?


பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாக செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்த வீட்டிலிருந்து அவரை கேள்வி கேட்க முதல் முறையாக தர்ஷன் முன் வந்துள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் வழக்கம் போல் வனிதா பிரச்சனை செய்க ஆரம்பித்துவிட்டார். இந்த முறை எதற்காக என்றால் நேற்று நடைபெற்ற டாஸ்க் முடிவில் சிறந்த போட்டியாளராக வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ் அனைவராலும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். ஆனால் வனிதா வந்தது பிடிக்காமல் யாரோ சொல்ல, அவருக்கு கோவம் வந்து சண்டை போடுவது போல் காட்டப்பட்டுள்ளது.

அப்போது அதில் நடுவில் வந்த தர்ஷன், ‘அவுட் ஆன பிறகு கேம்மை மற்ற முடியாது’ என்று கூற உடனே வனிதா இதில் நீ சம்மந்தமே இல்ல, நடுவுல வராத என்று கூறினார். பொதுவாக ஒன்றுமே இல்லாத விஷயத்தையே ஊதி பெரிது ஆக்கும் வனிதா இதை சும்மாவா விடுவாங்க…. உடனே தனது மைக்கை கழட்டித் தூக்கி எரிந்து விட்டு, பிக் பாஸ் கூட பேசவேண்டும், அவன் செய்தது சரியா என்று அவரே சொல்லட்டும், அல்லது இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் சிலர் தர்ஷனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ பாத்திமா பாபு உன் குரல் கேட்கவில்லை அதனால் நீ கொஞ்சம் நன்றாக விளையாட வேண்டும் என்று சொன்னதால் தான் தர்ஷன் எப்படி செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர். எது எப்படியோ இன்றைக்கான எபிசோடில் ஒரு தரமான சம்பவம் காத்துத்திருக்கிறது.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!