ஏன்டா அப்படிடி பண்ணுன? செய்தியாளரை புரட்டி எடுத்த பிரபல நடிகை!


பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜட்ஜ்மெண்டல் ஹை கியா’ திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கங்கனா ரனாவத், அவரிடம் தனது ‘மணிகர்னிகா’ படத்திற்கு ஏன் எதிர்மறையான விமர்சனத்தை கூறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தேசியத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுத்ததால் தன்னை அந்த பத்திரிகையாளர் ‘மூர்க்கத்தனமான பெண்’ என குறிப்பிட்டதாகவும் கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த அந்த பத்திரிகையாளர், கங்கனா ரனாவத் தன்னை அச்சுறுத்த முயல்வதாகவும், ‘மணிகர்னிகா’ திரைப்படத்தை பற்றி தான் எந்த கருத்தும் கூறவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து தொடர்ந்து அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!