வயிற்று வலியில் துடித்த பெண்மணி! மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்!


தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு சிமரன் தவறாக ஒரு ஆப்ரேஷனின் போது வயிற்றில் கை கடிகாரத்த்கை வைத்து தைத்து விடுவார் , அதுப் போலவே உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் எலீட்டா, இவர் கடந்த 23 ஆண்டுகளாக தொடர் வயிற்று வலியினால் துடித்து வந்துள்ளார். காரணமே தெரியாமல் மற்றவர்கள் சொல்லும் நிவாரணிகளை முயற்சி செய்தும் பலனில்லை,தொடர்ந்து மருத்துவரிடம் வலி வரும் போதெல்லாம் சென்று முறையிட அவர்களும் கல்லீரல் நோய் என சாக்கு போக்குகளை சொல்லி பணத்தை தீட்டி வந்துள்ளனர்.

இதற்கிடையில், புதிதாக அணுகிய மருத்துவர் ஒருவர் எலீட்டாவை எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்ய அதன்படி வந்த ரிப்போர்ட் மருத்துவரை திடுக்கிட செய்தது, ஆம் அந்த ஸ்கேனில் எலீட்டாவின் வயிற்றில் கத்தரிக்கோல் ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.

இது குறித்து பேசிய எலீட்டா 23 ஆண்டுகளுக்கு முன்னர் தனது குழந்தை பெறும் போது அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்ததை நினைவுக் கூர்ந்தார், மருத்துவரின் அலட்சிய போக்கினால் எலீட்டா 23 ஆண்டுகள் பாதிக்கபட்டுள்ளார். மேலும் இதற்க்கான நஷ்ட ஈடுக்கோரி அந்த மருத்துவமனை மீது வழக்கு போடப்பட்டுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!