கட்டிப்பிடித்த மீரா கமல் முன்பு செம நோஸ்கட் கொடுத்த சித்தப்பு..!


வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் முன்பே சரவணன் செய்யும் செயல்கள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சீனியர் போட்டியாளர்களில் சித்தப்பு சரவணன் நேற்று வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் பலரும் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போன்று இல்லாமல் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் கமல் ஹாஸன் முன்பு சரவணன் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மதுமிதாவை வெளியேற்ற வாக்களித்தபோது பார்வையாளர்கள் அவரை காப்பாற்றினார்கள். இதை கமல் மதுமிதாவிடம் தெரிவித்தபோது அவர் மண்டியிட்டு கதறி அழுதார். அவர் அழுததை பார்த்த சரவணனோ, போதும் போதும் எந்திரிமா என்றார். அவர் அப்படி சொன்னது பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது.

பார்வையாளர்கள் தன்னை காப்பாற்றியது குறித்து அறிந்ததும் மதுமிதா பயங்கரமாக அழுதார். அதை பார்த்து வனிதா, சாக்ஷி, மீரா, அபிராமி, கவின் ஆகியோர் கடுப்பானார்கள். பாத்திமா பாபு தான் பாவப்பட்டு ஆறுதல் கூறினார். மதுமிதா அருகில் அமர்ந்திருந்த சித்தப்புவோ, என்னா நடிப்புடா சாமி என்பது போன்று அவரை பார்த்தார். சித்தப்பு ராக்ஸ்.

நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கண் போன்ற அட்டையின் பாதியை கொடுத்து யாரின் மறுபாதியுடன் அது பொருந்துகிறதோ அந்த இருவரும் சேவ் செய்யப்படுவார்கள் என்றார் கமல். மீரா மிதுன் வைத்திருந்த அட்டை சரவணின் அட்டையுடன் பொருந்தியது. இதையடுத்து அவர் மகிழ்ச்சியில் சித்தப்புவை கட்டிப்பிடிக்க அவரோ இதெல்லாம் உனக்கே ஓவராக இல்லையா என்பது போன்று முகம் சுளித்தார்.

அட்டை பொருந்திய மகிழ்ச்சியில் சரவணனின் தோளில் கையை போட்ட மீரா, எனக்கு மிகவும் பிடித்த செவ்வாழை, என் மீது ரொம்ப பாசமாக இருப்பார் என்றார். இதை கேட்ட சரவணனோ, அட இருமா அவர் ஏதோ சொல்றார் என்று கூறி மீராவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார். இதையடுத்து சரவணன் தக் லைஃப் என்று கூறி நெட்டிசன்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!