ஆஸ்பத்திரி வளாக கால்வாயில் குழந்தை பெற்ற பெண் – ஒடிசாவில் நடந்த அவலம்..!


ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேருவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை அனுமதிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கேண்டின் அருகே இருந்த கால்வாயினுள் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உடனடியாக சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!