வீட்டின் குளியலறையில் 4 வயது சிறுமி பிணமாக மீட்பு – ராணுவ வீரர் செய்த கேவலம்..?


திருமுல்லைவாயலை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்(வயது 60). முன்னாள் ராணுவ வீரர். அதே பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று மாலை அவருடைய மனைவி, மகனை டியூஷனில் விடுவதற்காக சென்றுவிட்டார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள்.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த பெண், வீட்டில் தனது மகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் மகளை காணாததால் திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

போலீஸ் நிலையத்தில் புகார் செய்த கையோடு வீட்டுக்கு திரும்பி வந்த பெண், மீண்டும் வீடு முழுவதும் மகளை தேடினார். அப்போது வீட்டின் குளியல் அறையில் சாக்கு மூட்டைக்குள் தனது மகள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், அந்த பெண், மகனை டியூஷனில் விட சென்ற நேரத்தில் மர்மநபர் யாரோ வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி, குளியல் அறையில் வைத்து இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரத்தை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!