படுக்கை அறையில் தாயை கொன்று மகன் தற்கொலை…. சிக்கியது உருக்கமான கடிதம்..!


தானே மாவட்டம் மிராரோடு, பிவர்லி பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 7-வது மாடியில் வசித்து வந்தவர் கேரளாவை சேர்ந்த வெங்கடேஷ்வர்(வயது42). இவருடன் தாய் மீனாட்சியுடன்(75) வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கடேஷ்வரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே செல்லமுயன்றார். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

மேலும் பலமுறை தட்டிப்பார்த்தும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஹாலில் மீனாட்சியும், படுக்கை அறையில் வெங்கடேஷ்வரும் பிணமாக கிடந்தனர். போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்து மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.

அதில் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘‘எங்களின் சாவுக்கு யாரும் காரணமில்லை’’ என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வெங்டேஷ்வர் தாய் மீனாட்சிக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

நிதி நெருக்கடி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

தாயை கொலை செய்து மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிராரோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!