கோவிலில் யானையின் கால் இடுக்கில் சிக்கிய குண்டு பெண் – வைரல் வீடியோ!


குஜராத்தில் கோவில் ஒன்றில் யானையின் கால் இடுக்கில் சிக்கிய குண்டு பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர், கோயிலில் வைக்கப்பட்டிருந்த குட்டி யானை சிலையின் காலிடுக்கினுள் புகுந்து மாண்டா என்று சொல்லப்படும் மண்டி வழிபாடு செய்ய முற்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உடல்வாகுவுக்கு ஏற்ற இடமல்ல அது என்பதாலும், மேலும் குறுகலான கேப்தான் என்பதாலும் அந்த பெண் நன்றாக சிக்கிக்கொண்டார்.

யானை சிலைக்குள் புகுந்து, பின்னர் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்துள்ளார். இதை கண்ட அருகில் இருந்த பெண்கள் சிக்கிக்கொண்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பின்னர் ஒரு போராட்டத்திற்கு பின்னர் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இது வீடியோவாகவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.-Source: WEBDUNIYA

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!