கிரேஸி மோகனுக்கு உயிர் பிரியும் போது குடும்பத்துடன் சேர்ந்து கமல் செய்த அந்த காரியம்!


கிரேஸி மோகன் உயிர் பிரியும் போது குடும்பத்தில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் அவரது நெற்றியில் கைது வைத்து பிரியாவிடை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதைதொடர்ந்து கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவலை அறிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு உடனடியாக சென்றுவிட்டார். கிரேஸி மோகனின் உயிர் பிரியும் போது கமல் குடும்ப உறுப்பினர்களை போல் உடனிருந்தார்.


கிரேஸி மோகனின் உயிர் பிரியும் போது அவர் உடன் பிறந்த சகோதரரைபோல் கிரேஸி மோகனின் நெற்றியில் கை வைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கிரேஸி மோகனின் மழலை மாறாத மனசை கண்டு பொறாமை படுவதாகவும் கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம், நகைச்சுவை ஞானி என்று கமல்ஹஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். தனது சகோதரர்கள் சாருஹாசன், சந்திரஹாசன் போல மோகன்ஹாசன் என்றும் சொல்லும் அளவுக்கு கமலுக்கு நெருக்கமானவர் கிரேஸி மோகன்.

கிரேஸி மோகன் இல்லாவிட்டாலும் அவரது கலை மற்றும் குடும்பத்தினருடனான நட்பு தொடரும் என்கிறார் கமல். கமலின் வேவ்லென்த்தும் கிரேஸி மோகனின் வேவ்லென்த்தும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்துள்ளது.

அதற்கு பெரும் சான்று இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள். ஒரு காமெடியை ரசித்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்தக் காமெடியை உட்புகுத்தி பிரமிக்க வைப்பவர்தான் கிரேஸி மோகன். மைக்கெல் மதன காமராஜன் படத்தில் வரும் டயலாக்குகள் கமலின் டயலாக் டெலிவரிக்கும் நடிப்புக்கும் தீனி போட்டது என்றால் மிகையல்ல.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!