ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ!


மணிப்பூர் மாநிலத்திற்கு ஆய்வுக்காக சென்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ யதுவன்ஷ் குமார் யாதவ், ஹோட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

பீகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் சார்பில் அம்மாநிலத்தின் பைப்ரா தொகுதியில் போட்டியிட்டவர் யதுவன்ஷ் குமார் யாதவ். 50 வயதை கடந்த இவர் பீகார் சட்டசபையின் உள்நாட்டு வளம் மற்றும் மத்திய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராகவும் யதுவன்ஷ் குமார் உள்ளார். இந்நிலையில் இவர் மணிப்பூர் மாநிலம் மோரே பகுதிக்கு ஆய்வு தொடர்பாக சென்றார்.

அவருடன் குழு உறுப்பினர்களான பாஜக எம்எல்ஏ சச்சின் பிரசாத், ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜ் குமார் ராய் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ ராஜா பக்கர் ஆகியோரும் சென்றனர். இந்தக்குழு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி இந்திய- மியான்மர் எல்லையில் உள்ள மோரேவுக்கு சென்றது.

இந்நிலையில் அங்குள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த யதுவன்ஷ் குமார் டீன்ஏஜ் வயதுள்ள ஒரு பெண்ணை அறைக்கு அழைத்து அவருடன் ஆட்டம் போட்டுள்ளார். அந்தப்பெண்ணின் தோள்பட்டையில் கையை போட்டும் அவரை கட்டிப்பிடித்தும் எம்எல்ஏ அட்டகாசம் செய்துள்ளார்.

இதனை சற்றும் விரும்பாத அந்த பெண் எம்எல்ஏவின் கையை தட்டிவிட்டும், தொடர்ந்து எம்எல்ஏ இளம் பெண்ணின் மீது கையை போட்டு கட்டிப்பிடித்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த பெண் இதனை கொஞ்சமும் விரும்பாமல் தயக்கத்துடனேயே இருப்பது வீடியோவில் தெரியவந்துள்ளது.

எம்எல்ஏ யதுவன்ஷ் குமாருடன் சக எம்எல்ஏக்களும் ஆட்டம் போட்டுள்ளனர். ஆனால் அவர்களில் யார் இந்த வீடியோவை எடுத்தது என்பது தெரியவில்லை. வீடியோவின்படி இந்த கூத்துகள் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளன.

இம்பால் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி மணிப்பூர் எம்எல்ஏ ஒருவர் பீகார் எம்எல்ஏக்களுக்கு இந்த ஏற்பாடுகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதை கடந்த எம்எல்ஏ இளம் பெண்ணை தொந்தரவு செய்தபடி நடனம் ஆடும் வைரலாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!