நடிகை பூனம் பாண்டே அரைகுறை ஆடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. நடிப்பு மட்டுமில்லாது மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களில் ஏடாகூடமாகக் கேள்விகளை எழுப்புவது, கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிடுவது என எப்போதும் பிறரின் கவனத்தை தன்மீது திருப்பி லைம்லைட்டில் வலம் வரக்கூடியவர். ஒரு சமயத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் உலகக் கோப்பை ஆரம்பமாகியுள்ள நிலையில் நடிகை பூனம் பாண்டே, அரைகுறை ஆடையில், பலகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் #CRICKETWORLDCUP 2019 என்று பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்ஸ் சிலர், இந்த உலகக்கோப்பையிலும் இந்தியா வெற்றி பெற்றால், நிர்வாணமாக ஓடப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில் மட்டுமல்ல அவரின் அனைத்து புகைப்படங்களும் இதே மாதிரி முகம் சுளிக்கும் வகையிலேயே இருக்கிறது. இருப்பினும் தான் பிரபலமாவதற்காக இது போன்ற சர்ச்சைகளை நானே உருவாக்குவேன் என்று பூனம் பாண்டே வெளிப்படையாகக் கூறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.-Source: top tamil
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!