ஓடும் ரயிலில் பாய்ந்து 4 துண்டுகளாக கிடந்த இளம் காதல் ஜோடி – அதிர வைக்கும் காரணம்..!


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி அருகே ஓடும் ரயிலில் பாய்ந்து காதல் ஜோடி இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் நேற்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்நிலையில் அங்கிருந்தவர்கள் ரயில்வே கேட் அருகே இயேசு சக்கர வாகனம் ஒன்று நிற்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தனர் அப்போது இருவர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த உடனே அதிர்ந்தனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தது யார் என்பது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின்போது அங்கு இருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை தொடங்கிய போலீசார் அந்த வாகனம் நீடாமங்கலம் அருகே உள்ள பழங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் பிரியன் 21, என்பவரது வாகனம் என்று கண்டறிந்தனர் இதையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு பெற்றோர்கள் வந்தனர்.

மற்றும் அந்தப் பெண் காளச்சேரி பகுதியைச் சேர்ந்த வினிதா 20 ,என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் வினிதாவின் கையில் ராகுல் என பச்சை குத்தி இருப்பதால் போலீசார் இருவரும் காதலர்கள் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் மனம் உடைந்து இந்த காதல் ஜோடி தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இடத்தில் அவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!