8 வருட காதலிக்காக போராட்டம் நடத்திய காதலன் – கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?


காதலியைத் திருமணம் செய்யக் காதலன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த பர்மன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த லிப்பிக்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில் திடீரென லிப்பிக்கா பர்மனுடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார். காரணம் தெரியாமல் தவித்து வந்த பர்மனுக்கு , லிப்பிக்காவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக வந்த செய்தி கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்தது.


இதனால் லிப்பிக்காவின் திருமண நாளன்று அவரது வீட்டிற்கு சென்ற பர்மன் அங்கேயே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தன் கையில், ‘என் காதலைத் திரும்பக் கொடு, என் 8 வருட வாழ்க்கையைத் திரும்பக் கொடு’ போன்ற பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட பலரும் ஆச்சரியத்தில் அதிர்ந்து போயினர்.

சிறிது நேரத்தில் மணமகன் வீட்டாரும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அங்கு இருந்த ஊர் பொதுமக்கள் பர்மனுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். இதனால் லிப்பிக்காவும், அவரது குடும்பத்தினரும் திருமணத்தை நிறுத்தினர். மேலும் ஆனந்த பர்மனை தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க லிப்பிக்காவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின் ஆசியுடன் இவர்களது திருமணம் நடைபெற்றது.

8 வருடமாகக் காதலித்த பெண்ணை உண்ணாவிரத போராட்டம் இருந்து திருமணம் செய்த இளைஞருக்கு அப்பகுதிவாசிகள் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!