தமிழகத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கழுத்தை அறுத்து கொலை..!


மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் நாராயண் (வயது52). ஓட்டல் உரிமையாளர். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர் அங்குள்ள பத்மாகேலக்சி என்ற கட்டிடத்தின் 7-வது மாடியில் வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் புதுச்சேரி சென்றிருந்தனர். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம்கேட்டு கேட்டது. இதைக்கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர்.

அப்போது ஆனந்த் நாராயண் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆனந்த் நாராயணை மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீஸ் வலைவீச்சு

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அண்டாப்ஹில் போலீசார் ஆனந்த் நாராயணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போலீசார் பத்மாகேலக்சி கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சம்பவத்தின் போது பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் அதிகாலை நேரத்தில் மர்ம ஆசாமிகள் 2 பேர் அவரது வீட்டுக்குள் வந்து சென்றது தெரியவந்தது. எனவே அவர்கள் தான் ஆனந்த் நாராயணை கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் ஆனந்த் நாராயண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை கண்டறியவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!