நான் நடித்த படத்தை ரிலீஸ் செய்ய வாந்தி எடுத்தேன்… பிரபல நடிகை பேட்டி!


ஹாலிவுட் நடிகைகள் பலரும் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், உள்பட பல் நடிகைகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் 51 வயதாகும் நடிகை சல்மா ஹாயாக், வெய்ன்ஸ்டைனை ஆத்திரமடைந்த “அசுரன்” என்று கூறினார். மேலும் , அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தன்னை கொன்று விடுவதாக அச்சுறுத்தினார் என கூறி உள்ளார்.


இது குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அவர் எழுதி உள்ளதாவது:-

வெய்ன்ஸ்டைன் ஒருமுறை என்னிடம் கூறினார், “நான் உன்னைக் கொல்லுவேன், என்னால் முடியாது என்று நினைக்காதே” என்று கூறினார். தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார் மறுத்துவிட்டேன்.

எனக்கு ஓரல் செக்ஸ் செய்ய வேண்டும் என்றார் முடியாது என்றேன். சேர்ந்து குளிக்கலாம் என்றார் மாட்டேன் என்றேன். நீ குளி நான் பார்க்கிறேன் என்றார் அதற்கும் முடியாது என்றேன் அவர் மற்றொரு நடிகையுடன் ஒரு நிர்வாண காட்சியை படமாக்காத வரை இந்த திரைப்படத்தை நிறுத்தி விடுவதாக அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

நான் நடித்த ப்ரீடா படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை செய்தார். இதனால் அவருடன் நான் ஒரு சமாதானத்தை எடுக்க வேண்டியிருந்தது. அது இறுதியில் நான் அழுவதை நிறுத்தியது ஆனால் வாந்தி வரும் மோசமான அனுபவத்தை கொடுத்தது. என கூறி உள்ளார். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!