மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்… நடிகர் சித்தார்த் ஆவேசம்..!


இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடந்து வருகிறது. தற்போது உள்ள முன்னிலை நிலவரங்களின் படி பா.ஜ., தலைமையிலான கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நடிகர் சித்தார்த் தேர்தல் சமயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் வாய் ப்பு இருக்கும் சூழ்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் நான் எனது டுவிட்டர் பக்கத்தை நிரந்தரமாக நீக்கி விடுவேன். ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு கிண்டல் பதிவாக தான் பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் பலர் அவரை கிண்டல் செய்து பதிலளித்து வருகின்றனர்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!