குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பெண்ணை சீரழித்த தொண்டு நிறுவன உரிமையாளர்..!


மும்பையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தொண்டு நிறுவன உரிமையாளர் கற்பழித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் பத்மகார் நந்தேகர்(52). இவர் மும்பையில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இந்த தொண்டு நிறுவனத்தில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு பிரேசிலைச் சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவர் வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு பணியாற்ற வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி டின்னருக்கு வருமாறு அப்பெண்ணை ஒரு ஓட்டலுக்கு வரச் சொல்லியுள்ளார்.

அப்பெண்ணும் நந்தேகரை நம்பிச் சென்றுள்ளார். அங்கு அப்பெண் அருந்திய குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்துள்ளார். அப்பெண் அதனை குடித்தவுடன் மயங்கிவிட்டார். பின்னர் ரூமிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார்.

மறுநாள் காலை அப்பெண்ணுக்கு இது தெரிந்தவுடன், தனது பாதுகாப்பாளருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக அப்பகுதி போலீசாரிடம் இருவரும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீசார் நந்தேகரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை உள்ளூர் கோர்ட்டில் நந்தேகரை ஆஜர் படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 24ம் தேதி வரை நந்தேகரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!