தூக்கத்தில இப்படியும் செய்வாங்களா..? தைவான் நபர் செய்த அதிர்ச்சி செயல்..!


தைவானிலுள்ள கௌஷியங் என்ற ஊரில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ‘இப்படியுமா பண்ணுவாங்க?’ என்று வியக்க வைக்கும் அந்த நிகழ்வு என்ன என்று பார்ப்போம். தன்னுடைய ஹெட்போனை விழுங்கிவிட்டு தேடிய இளைஞர் பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இந்த கட்டுரை பேசுகிறது.

இதைப் படித்த பின் நிச்சயம் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சர்யப்படுகிற நிலைக்கு நிச்சயம் இந்த கதை இருக்கும்.

ஸு என்பவர் உறங்கி விழித்தார். அவரது ஏர்பாட்-களை தேடினார். இடக்காதுக்கான ஏர்பாட்-ஐ இருந்தது. வலக்காதுக்குரிய ஏர்பாட்-ஐ காணாமல் திகைத்தார். எங்கெங்கோ தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆகவே, ஐபோனை தேடக்கூடிய Find My iPhone என்ற செயலியை பயன்படுத்தி, வலப்பக்கத்துக்கான ஏர்பாட்-ஐ தேட முடிவு செய்தார்.

செயலியை பயன்படுத்தி தேடியபோது, ஏர்பாட் இருக்கும் இடத்திலிருந்து சத்தம் வந்தது. ஆனால், எங்கிருந்து வருகிறது என்று அவரால் திட்டமாய் கண்டுபிடிக்க இயலவில்லை.

மிகவும் கூர்ந்து கவனித்தபோது, தனது உடலுக்குள் இருந்துதான் சத்தம் வருகிறது என்று கண்டுகொண்டார். அதன்பிறகுதான், தூங்கும்போது, வலப்பக்க ஏர்பாட்-ஐ தான் விழுங்கியிருப்பது ஸுவுக்கு தெரிய வந்தது. வயிற்றுக்குள் ஏர்பாட் இருந்ததால் அவருக்கு உடல்ரீதியாக எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனாலும், ஏர்பாட் உடலுக்குள் இருப்பது அவருக்கு அச்சத்தைக் கொடுத்தது.

மருத்துவர் ஒருவரிடம் சென்று தன் பிரச்னையை கூறினார் ஸு. மருத்துவர், எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததில், ஸுவின் செரிமான உறுப்புகளுக்குள் ஏர்பாட் இருப்பது தெரிய வந்தது.

நிலைமையை உணர்ந்த மருத்துவர், வயிறு கழிவதற்கு மருந்து எழுதினார். மலத்தோடு சேர்ந்து ஏர்பாட் வெளியே வருகிறதா என்பதை கவனிக்குமாறு ஸுவிடம் கூறினார். மறுநாள், ஏர்பாட் மலத்தோடு வெளியே வந்தது.

வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த ஏர்பாடை ஸு தூக்கி வீசினாரா? இல்லை. அதை சுத்தப்படுத்தி திரும்ப பயன்படுத்தி வருகிறாராம். விடாகண்டன்தான் அவர்.-Source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!