வீட்டில் இளம் பெண் கொலை.? ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்.!


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி (19) விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ படித்து வந்தார்

ஏழை கட்டிடத்தொழிலாளியான டி.பவழங்குடி சுந்தரமூர்த்தியின் மகள் திலகவதி. கருவேப்பிலங்குறிச்சி அருகே வாடகை வீட்டில் வசித்துள்ளார். அந்த பகுதிக்கு அருகே பெரிய காலனி பகுதிகள் உள்ளன. இந்நிலையில், பேரலையூர் சேர்ந்த ஆகாஷ் என்பவன் வீட்டில் தனியாக இருந்த திலகவதியை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்ட பின்னரும் உறவினர்களுக்கு செல்பேசி மூலம் திலகவதி தகவல் அளித்துள்ளார். உறவினர்கள் வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதற்குள் அவர் உயிரழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல ஓர் ஆண்டுக்கு முன்னதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவி ஒருவரை கல்லூரி வாசலில் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

6 மாதத்திற்க்கு முன்பு குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் கடலூரில் ஒருதலை காதல் படுகொலைகள் அதகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ள நிலையில், அங்கு பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்தை தடுக்க அரசும் பொது அமைப்புகளும் முன்வர வேண்டும். கடலூர் மாவட்ட இளம்பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்

இது போன்ற குற்றங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு முழு இழப்பீடு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.-Source: seipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!