இப்படி ஒரு சந்தேக புத்தியா..? மனைவியை வேவுபார்த்து மாட்டிக்கொண்ட முதியவர்..!


மெக்சிகோ நாட்டில் 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க திட்டமிட்டு மனைவியின் வீட்டின் அடியில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளார்.

அவரது உருவத்திற்கேற்ப துளையிடாததால் வசமாக மாட்டிக்கொண்ட அவர், உள்ளே நுழைய முடியாமலும் வெளியே வரமுடியாமலும் அவதிப்பட்டு உதவிக்கு சப்தமிட்டு அழைத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து அவரது முன்னாள் மனைவியிடம் நடத்திய விசாரணையில், வீட்டில் ஓட்டை போட்டவர் அவரது கணவர் என்பதும் முன்னாள் மனைவி மீதான சந்தேகத்தில் ஓட்டை போட்டதும் தெரியவந்தது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!