இளம் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்! படுக்கை அறையில் சடலமாக கிடந்தார்!


பிரபல இளம் நடிகையான மியா லெசியா நெய்லர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இங்கிலாந்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமான மியா லெசியா நெய்லர் பிரபல குழந்தைகள் தொடரான மில்லி இன்பிட்வீன் தொடரிலும் ஆல்மோஸ்ட் நெவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலக்கியவர். இவர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் நேற்றுத் தான் மரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை

பிபிசி சில்ரன்ஸ் இயக்குநரான அலைஸ் வெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மியாவின் மரணம் தொடர்பான செய்தி கேட்டு தாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திறமையான நடிகையும், நடனக் கலைஞரும், பாடகியுமான மியா இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்ததாகவும், மில்லி இன்பிட்வீன் தொடரிலும் ஆல்மோஸ்ட் நெவர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் மியா வரும் காட்சிகளில் திரையே பிரகாசமாகி விடும் என்று தெரிவித்துள்ள அவர், மியா இனி தங்களுடன் பயணிக்கப் போவதில்லை என்பதை தங்களால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இளம் இசைக் கலைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சியான ஆல்மோஸ்ட் நெவரில் மியாவுடன் சேர்ந்து பணியாற்றும் நடிகையான எமிலி அட்டாக்கும் மியாவின் மரணம் குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார். மியா அழகும் திறமையும் நிரம்பியவர் என டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள எமிலி படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் மியாவால் மகிழ்ச்சியில் இருந்ததாகத் தெரிவித்துள்ள அவர், அழகிய மியா அமைதியில் உறங்கட்டும் என்று கூறியுள்ளார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!