பார்த்தவுடனே சவுந்தர்யாவை பிடித்துவிட்டது…. வெளிப்படையாக பேசிய விசாகன்!


சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் இருவரும் தங்களது திருமணம் எப்படி உறுதியானது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 2ஆவது மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபரின் மகன் விசாகனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது, 2 மாதங்கள் ஆன நிலையில், திருமணம் நடப்பதற்கு காரணமானவர்கள் குறித்து இருவரும் வெளிப்படையாக பேசியுள்ளனர். இது குறித்து முதலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், முதலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தான் என்னுடைய அப்பாவிடம், விசாகன் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி பேசியுள்ளார்.

இதையடுத்து, அப்பா இது குறித்து என்னிடம் கூற, எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதில் ஈடுபாடு இல்லை. எனினும், அவரை சந்திக்க விரும்பினேன். எனக்கு பயமாக இருந்தது. அதனால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷுடன் நான் காஃபி கடைக்கு சென்றிருந்தார். அப்போது, முதல் முறையாக விசாகனைப் பார்த்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து விசாகன் கூறுகையில், அவர்களை பார்க்கும் பொழுது எனக்கும் முதலில் ஒரு வித படபடப்பாக இருந்தது. பார்த்தவுடனேயே, சவுந்தர்யாவை பிடித்துவிட்டது. அதனால், இது தான் சரியான தருணம் என்று இருவரும் முடிவு செய்தோம். தொடர்ந்து, எங்களது முடிவை ரஜினிகாந்திடம் தெரிவிப்பதற்கு முன்பு, எங்களது முடிவு அனைவருக்கும் பெரியதாக இருந்தது என்று தனுஷ் கூறியதாக விசாகன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 11ம் தேதி சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!