தாயை விட பணம் முக்கியம் என மகள் நினைப்பது வேதனையாக இருக்கு – சங்கீதாவின் தாயார் பகீர்..!


தன்னை 13 வயதிலேயே தனது தாயார் தொழிலுக்கு அனுப்பியதாக நடிகை சங்கீதா கூறியிருந்த நிலையில் அதற்கு அவரது தாயார் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சங்கீதாவின் குற்றச்சாட்டு குறித்து அவரது தாயாரான பானுமதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பானுமதி, தன் மகள் ஏன் இப்படி அபாண்டமாக பேசுகிறார் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். சங்கீதாவிற்கு பதினோரு வயது இருக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டதாகவும் அதன் பிறகுதான் தனி ஆளாக சங்கீதாவை வளர்த்து ஆளாக்கிய தாகவும் தெரிவித்தார்.

சங்கீதா பிளஸ் 1 படித்து கொண்டிருந்த போதுதான் பூஞ்சோலை படத்தில் படிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததாக பானுமதி கூறியுள்ளார். நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு அவர் விருப்பம் இருக்கிறது என்று கூறிய பிறகுதான் சங்கீதாவை பூஞ்சோலை படத்தில் நடிக்க அனுப்பி வைத்ததாக பானுமதி கூறியுள்ளார்.

ப்ளஸ் ஒன் படிக்கும் போது ஒரு பெண்ணிற்கு என்ன வயது இருக்கும் என்று உங்களுக்கேத் தெரியும். அப்படி இருக்கும்போது 13 வயதில் தான் அவரை வேலைக்கு அனுப்பியதாக கூறியது கற்பனையான குற்றச்சாட்டு என்று பானுமதி தெரிவித்துள்ளார். மிகுந்த சிரமத்திற்கு இடையையும் சங்கீதாவை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்ததாகவும் ஆனால் பட வாய்ப்பு வந்த காரணத்தினால் தான் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியது ஆகிவிட்டதாகவும் பானுமதி கூறியுள்ளார்.

தனக்கும் தனது மகளுக்கும் இடையிலான பிரச்சனைக்கு பணம் தான் காரணம் என்று ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தாயை விட பணம் முக்கியம் என்று தனது மகள் நினைப்பது வேதனையாக இருப்பதாகவும் கூறி முடித்துக்கொண்டார் பானுமதி.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!