நானும் ஒருவரை உயிருக்குயிராய் காதலித்தேன் ஆனால்… நடிகை சித்தாரா..!


இயக்குநர் சிகரம் பாலசந்தரின் அவர்களின் இயக்கத்தில் ரகுமான் நடித்து 1989-ம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான புதுப்புது அர்த்தங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சித்தாரா. இப்படத்திற்கு பின்னர் கார்த்திக்குடன் உன்னை சொல்லி குற்றமில்லை, புது வசந்தம், அர்ச்சனா ஐ.பி.எஸ், புரியாத புதிர், நட்புக்காக, முகவரி உட்பட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார்.

படையப்பா, நட்புக்காக ஆகிய படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். இது தென்னிந்தி மொழிகள் அனைத்திலும் நடித்தார். தமிழில் கடைசியாக நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் சித்தாரா சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சித்தாரா அவர் கூறியதாவது…

நான் சினிமாவிற்கு வந்த 30-வருடங்கள் ஆகிவிட்டன. திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு ஒருவரை இதுவரை நான் பார்க்கவில்லை. நிறைய வரன்கள் தேடி வந்தன. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடு வந்ததால் நான் மறுத்துவிட்டேன். நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்காமல் இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை.

சித்தாரா என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பட உலகிலும் எல்லோருக்கும் நன்றாக தெரியும். தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பெண்ணை திருமணம் செய்கிறோம் என்ற பரந்த மனசு இல்லாதவர்களுடன் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.


காதலித்திருக்கிறேன். ஆனால் அது கல்யாணம்வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன். புதுப்புது அர்த்தங்கள் படம் நடித்த பிறகுதான், இனி சினிமாதான் நம் தொழில் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நடிகை ஆனதற்காக சந்தோஷபட்டேன்.

சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்ப மதிக்கிறேன். அதனால் திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 30-வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதபட்டிருக்கிறது.

நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. என்னை புரிந்து கொண்டு, நீ தொடர்ந்து நடிக்கலாம் என்று சொல்கிற புருஷன் வரவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. அப்படி ஒருவர் வருவதற்காக காத்திருக்கிறேன். என இவ்வாறு கூறினார் நடிகை சித்தாரா அவர்கள்.-Source: newstig

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!