கர்ப்பிணிகள் அதிகமாக கொத்தவரங்காயை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா..?


பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொத்தவரங்காய் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. வீட்டுத் தோட்டத்தில் எளிதில் விளையக்கூடிய கொத்தவரங்காய் கூட்டு, பொரியல் மற்றும் வற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடிய கொத்தவரங்காய் மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. ஆனால் இதனை நறுக்குவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலரும் இதனை வாங்க விரும்புவதில்லை.

· குறைந்த கலோரியும் அதிக தாதுக்களும் கொண்ட கொத்தவரங்காய் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த முறையில் உதவுகிறது.

· ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் கிளைகோநியூட்ரியன்ஸ் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது.

· கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகிறது.

· கொத்தரவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.

செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்தாகிறது கொத்தவரங்காய். வயிற்றில் சேரும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, செரிமான நோய்கள் வராமல் காக்கவும் உதவக்கூடியது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!