இ-சிகரெட்டை நிரந்தமாக தடை செய்யுங்க… களத்தில் குதித்த 1000 டாக்டர்கள்..!


இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இ–சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதனால் இதன் விற்பனைக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.

இதை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இருப்பினும் சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகளை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,061 டாக்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த டாக்டர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சில நிறுவனங்கள் இணையதளத்தில் இ–சிகரெட்டுகள், இ–ஹூக்கா போன்றவற்றை தொடர்ந்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது மக்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினையாகும். இ சிகரெட்கள் உடல் நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பது. எனவே, அதற்கு நிரந்தர தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!