தாயின் சேலையில் திடீரென பிடித்த தீயால் மகள் படுகாயம்… தாயின் நிலை…!


காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் சிற்பி நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி ஜெயா (வயது 48).

இவரது மகள் வடிவுக்கரசி (வயது 21), நேற்று முன்தினம் ஜெயா வீட்டில் ஸ்ட்வ் பற்ற வைக்கும் போது திடீரென அவரது சேலையில் தீப்பிடித்துக்கொண்டது. இதை பார்த்த அவரது மகள் வடிவுக்கரசி தீயை அணைக்க முயன்றார்.

இதில் தாய், மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக இறந்தார். அவரது மகள் வடிவுக்கரசி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!