ரொம்ப சந்தோஷம், அதுவும் விஜய் சேதுபதி கூட கிரிக்கெட் வீரர் உற்சாகம்!

இந்திய அணிக்கு 2011-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர். ஆல் ரவுண்டர் விஜய் சங்கர். ஆங்காங்கே சருக்கல்கள் இருந்தாலும் பவுலிங், பேட்டிங் என ஆஸ்திரேலியா உடனான தொடரில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். உலகக் கோப்பை அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர். பின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதியின் தீவிர ரசிகரான விஜய் சங்கர். நேற்று விஜய் சேதுபதியை சந்தித்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். இது தனது ஃபேன்பாய்மொமென்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த வாரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகக் களம் காணவுள்ளார். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.