இவனுகளை ஆண்மையை நீக்கி.. குருடாக்க வேண்டும் – பிரபல தயாரிப்பாளரின் மனைவி ஆவேசம்!!!


பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்காமல் அதற்கும் மேலாக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.


இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கொடூரத்தை செய்தவன்களுக்கு மரண தண்டனை கொடுக்காமல், அவன்களுக்கு ஆண்மையை நீக்கி அவன்களை குருடாக்கி, தனியறையில் அடைத்து பைத்தியக்காரன்களை போல் திரிய வைக்க வேண்டும் என ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.-Source: .webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!