பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை கடந்த 7 ஆண்டுகளாக ஒரு கும்பல் சூனியமாக்கி வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போல் இந்த கும்பலை சேர்ந்த ரிஷ்வந்த் என்ற சபரி ஒரு பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்துவிட்டார். பின்னர் அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் தயாராக இருந்த காரில் அழைத்து சென்றார்.
அப்போது அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதை நைஸாக வீடியோ எடுத்தார். அப்போது சுதாரித்து கொண்ட அந்த பெண், கூச்சல் போட்டார். உடனே அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டனர்.
இதையடுத்து அந்த பெண் நடந்தவற்றை பெற்றோரிடமும் ஊர் மக்களிடமும் தெரிவித்துவிட்டார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்த மூவரையும் பொதுமக்கள் பிடித்து இழுத்து வந்தனர்.
அவர்களது செல்போன்களை வாங்கி பார்த்ததில் அதில் ஏராளமான வீடியோக்கள் இருந்தன. பின்னர் அவர்களை சரமாரியாக அடித்தனர். வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ என எட்டி உதைத்தனர்.
இதையடுத்து ஆத்திரம் தாளாமல் அப்பகுதி இளைஞர்கள் கற்களை கொண்டும் இவர்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக இரு வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகே பொதுமக்கள் மூவரையும் போலீஸில் ஒப்படைத்தனர்.-Source: oneindia
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!