மக்களை பயமுறுத்தும் தீவிரவாதி போல மோடி இருக்கிறார் – விஜயசாந்தி கடும் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து அவரது செயல்பாடுகளாலும், அவர் செயல்படுத்திய திட்டங்களாலும் அவர் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

அதனால்தான் அவர் செல்லும் பெரும்பாலான மாநிலங்களில் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விஜயசாந்தி, “ராகுல் காந்தியும், மோடியும் சந்திக்கும் போர்தான் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்.

எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மோடி பயங்கரவாதி போல தோற்றமளிக்கிறார். தனது மக்களை நேசிப்பதற்கு பதிலாக, அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்- Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.