கோபம் தலைக்கேறி இணையத்தில் தேடி குழந்தையை கொன்ற பிரித்தானிய தாய்..!


லண்டனில் Fordingbridge நகரில் வசித்து வந்த பெண்மணி தனது கணவர் மீது இருந்த வெறுப்பு காரணமாக 3 வயது குழந்தையை குளிக்கும் தொட்டியில் அமுக்கி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Claire Colebourn என்ற பெண்மணியின் கணவர் Michael . ஒரு கம்பெனியின் இயக்குநராக இருக்கும் Michael தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்துள்ளார்.

இதை அறிந்த Claire Colebourn தனது கணவர் மீது கோபம் கொண்டுள்ளார். கணவர் மீது வெறுப்பு அதிகரிக்க அதிகரிக்க அது 3 வயது குழந்தையின் பக்கம் திரும்பியுள்ளது.

இதனால் தனது 3 வயது குழந்தையை வலிக்காமல் கொலை செய்வது எப்படி என்று இணையத்தில் தேடியுள்ளார். அதன்பின்னர் குளிக்கும் தொட்டியில் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார் Claire Colebourn.-Source: lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!