செல்லமாக வளர்த்த நாயுடன் உயிரை விட்ட திவ்யா.. கணவரின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!


“பாதரசத்தை திவ்யா வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினேன்” என்று உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த பேராசிரியை கொலைக்கான பகீர் பின்னணி காரணமும் இப்போது தெரியவந்துள்ளது.

கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சில்வஸ்டர். இவருக்கும் பெல்லார்மின் என்பவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கணவன் பெல்லார்மின்வேறு ஒரு பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால் திவ்யாவை விவாகரத்து செய்துவிட்டு போகும்படி சொல்லி உள்ளார்.

அதற்கு திவ்யா மறுப்பு சொல்லவும் ஒரு கட்டத்தில் காதலிக்கும் பெண்ணைதான் கல்யாணம் செய்ய போகிறேன், விவாகரத்து செய்துவிட்டு போ என்று மிரட்ட ஆரம்பித்துள்ளார் பெல்லார்மின். ஆனால் திவ்யாவோ, பல லட்சம் ரூபாய் செலவழித்து வீட்டில் கல்யாணம் செய்து வைத்துள்ளதால், விவகாரத்துதர மனமில்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த பெல்லார்மின் சில வாரங்களுக்கு திவ்யாவின் வாயில் பாதரசத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அதை திவ்யா தட்டிவிட்டவும், அந்த பாதரச துளிகள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளில் பட்டு அது உருகி உள்ளது. இதையெல்லாவற்றையும் திவ்யா அவரது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

எனினும் திவ்யா தொடர்ந்து விவாகரத்து தர மறுக்கவும்தான் சாப்பாட்டில் விஷம் வைப்பது என முடிவு செய்தார் பெல்லார்மின். திவ்யாவுக்கு உப்புமா வாங்கி வந்து அதில் விஷத்தை கலந்து சாப்பிட தந்துள்ளார். தான் என்ன சாப்பிட்டாலும் அதை வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்கு கொஞ்சம் தருவது திவ்யாவின் பழக்கமாம்.

அதனால் நேற்றும் அப்படித்தான் உப்புமா தந்திருக்கிறார். பிறகுதான் திவ்யா சாப்பிட்டுள்ளார். ஆனால் உப்புமாவை சாப்பிட்ட நாய், திவ்யா கண்ணெதிரிலேயே வாயில் ரத்தம் வழிந்து விழுந்து இறந்துள்ளது. திவ்யா ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததையடுத்து, அவரது தந்தை சில்வெஸ்டர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் பெல்லார்மின் , மாமியார் மாமனார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!