பிறந்து சில மணி நேரத்தில தொப்புள் கொடி கூட அறுக்காமல் வீசி எறியப்பட்ட பெண் குழந்தை!


கோவையில் பிறந்துசில மணி நேரமே ஆன, தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில்இருந்த பெண் குழந்தையைகோவில் பகுதியில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சரவணா நகர் பகுதியில் கோவை திருப்பதி கோவிலின் அருகே மாட்டுப்பபண்ணை வைத்திருப்பவர்கள் சிவராமசந்திரன் மற்றும் அமுல் தம்பதியினர். இன்று அதிகாலை கோவிலினுள் இருந்து குழந்தை ஒன்றின்அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அங்கு மாட்டு சாணம் எடுத்துக்கொண்டிருந்த அமுல் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட சரியாக அறுக்கப்படாமல், ரத்தத்துடன் பெண் குழந்தை ஒன்று மண்ணில் வீசப்பட்டு கிடந்துள்ளது.

குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, தம்பதியினர் உடனே குழந்தையை எடுத்து துடைத்து பால் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, அவசர எண் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர் அந்த தம்பதியினர். பின்னர், தகவல் அறிந்து அங்கு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையை துடியலுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் தொப்புள் கொடியை அறுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர்.

தொடர்ந்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி மூலம் குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தையை கோவிலில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!