வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பா..? – பேராசிரியையின் தந்தை அதிர்ச்சி வாக்குமூலம்..!


கொலை செய்யப்பட்ட பேராசிரியையின் தந்தை தக்கலை போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமணமான சில மாதங்களுக்கு பிறகு திவ்யாவிடம் நெருக்கமாக இருப்பதை பெல்லார்மின் தவிர்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதுபற்றி திவ்யா என்னிடம் கூறி கதறி அழுதார். மேலும் பெல்லார்மின் குடும்பத்தினரும், திவ்யாவை தான் குறை சொன்னார்களே தவிர, பெல்லார்மினை கண்டிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் பெல்லார்மின், திவ்யாவுக்கு குளிர்பானத்தில் ஒன்றை கலந்து கொடுத்துள்ளார். ஆனால் திவ்யா குடிக்காமல் அதனை தட்டி விட்டார். இதில் ஒரு பகுதி, திவ்யாவின் தாலியில் பட்டதில், அது உருகி உள்ளது. பின்னர் திவ்யாவிடம், குளிர்பானத்தில் கலந்தது பாதரசம் என்றும், உன்னை கொல்லவே பாதரசத்தை கலந்ததாக பெல்லார்மின் மிரட்டியுள்ளார்.

இந்த அதிர்ச்சி தகவலை திவ்யா என்னிடம் கூறி கதறி அழுதார். இந்த நிலையில் தான் திவ்யா இறந்துள்ளார். உணவில் விஷம் கலந்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதுதொடர்பாக விசாரணை நடத்தி பெல்லார்மின் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பெல்லார்மின் திவ்யாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடும்போது, நான் வேறு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறி வந்ததும், இதனை திவ்யா தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே பெல்லார்மினுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கு இடைஞ்சலாக இருந்ததால் திவ்யாவை அவர் கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீஸ் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!