பிரபாஸ் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்ட ரசிகை! வைரல் வீடியோ!


பாகுபலி படத்திற்குப் பிறகு பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் நடிகர் பிரபாஸ். தற்போது இவரது நடிப்பில் ‘சாஹோ’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் போட்டோ எடுத்த சந்தோஷத்தில் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டு சென்றார்.

ரசிகை இப்படி ஆர்வக்கோளாறில் அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கன்னத்தை தடவிவிட்டு சிரித்து சமாளித்தார் பிரபாஸ். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகை உணர்ச்சிவசப்பட்டு அறைந்த நிலையிலும் நடிகர் பிரபாஸ் அந்த இடத்தில் கண்ணியம் காத்துள்ளார். இதன் மூலம் பிரபாஸ் மீதான மதிப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!