ஒரே ஒரு செல்போன் அழைப்பால் மனைவி மரணம்… அதிர்ச்சியில் கணவன்…!


திருச்சி மாவட்டம் அடுத்த இனாமாத்துரை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஒரு செல்போன் அழைப்பால் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பிறகு வெளியே சென்ற வேலுச்சாமி திரும்பி வந்து பார்த்த போது மனைவி செல்போனில் யாருடனோ பேசியதை பார்த்து சந்தேகம் அடைந்தார். இது பற்றி அவர் கேட்ட போது தனது அம்மாவுடன் பேசியதாக கூறினார்.

சந்தேகம் தீராத வேலுசாமி மனைவியின் போனை கேட்டபோது அவர் மனைவி பேசிய எண்ணை டெலிட் செய்து கொடுத்துள்ளார். இதனால் தனது மனைவியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பிறகு கடைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும் போது ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி பரிசோதனிக்காக அனுப்பி வைத்தனர். – Source: liveday

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!