தந்தையின் கல்லறையில் பிரார்த்தனை செய்த மாணவிக்கு நடந்த பரிதாபம்..!


கேரள மாநிலம் வராபுழாவை சேர்ந்தவர் அனில். இவரது மகள் கீதல் (வயது 12). அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1 மாதத்துக்கு முன்பு அனில் வாகன விபத்தில் இறந்து விட்டார்.

தந்தை மீது அதிக பாசம் வைத்திருந்த கீதல் அடிக்கடி அவரது கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்து வந்தார். சம்பவத்தன்றும் கல்லறையில் மெழுகுவார்த்தி ஏற்றி கல்லறையில் பிரார்த்தனை செய்தபோது மெழுகுவர்த்தி கவிழ்ந்து கீதல் அணிந்திருந்த ஆடை மீது தீ பற்றியது.

தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த மாணவி அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி கீதல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வராபுழா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!