கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பாப் பாடகர் எவளவு கோடி செலுத்தி ஜாமீனில் வந்தார் தெரியுமா..?

அமெரிக்க பாப் பாடகர் ஆர். கெல்லி (வயது 50). இவர் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர். கடந்த 1998 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 3 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

கற்பழிக்கப்பட்டவர்களில் 3 பெண்கள் 13 முதல் 16 வயது உடையவர்கள். உலகம் முழுவதும் ‘மீ டூ’ இயக்கம் பிரபலமானபோது இவர்கள் பாடகர் ஆர்கெல்லி மீது புகார் கூறினர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அது உண்மை என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்கெல்லி ஜாமீன் கேட்டு மனு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் ரூ.7 கோடியே 10 லட்சம் பிணைத் தொகையில் ஜாமீனில் விடப்பட்டார்.

2002-ம் ஆண்டில் சிறுமிகளை நிர்வாண வீடியோ எடுத்ததாக பாப் பாடகர் ஆர்கெல்லி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் 2008-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.