நான் மாடலிங் தொழிலுக்கு வந்ததே இதற்குத் தான்… உண்மைக் காரணத்தை உளறிய ரைசா…!


உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நன்கு அறியப்பட்டவரானார் பிரபல மாடலும், நடிகையுமான ரைசா.

இவர் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏராளமான விளம்பரப்படங்களிலும் தோன்றி வருகிறார்.

இந்நிலையில், 7அப் கூல்டிரிங்ஸ் சார்பில் ‘தமிழ்நாட்டின் குரல்’ என்ற சிறந்த பாடகர்களைத் தேடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சிறந்த குரலுக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு ‘பிக் பாஸ்’ பிரபலமான ரைசா கலந்து கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் நடிப்பதற்காக வரும் வாய்ப்பை கண்டிப்பாக மறுக்க மாட்டேன். தமிழ் ரசிகர்களால் எனது வாழ்க்கையே மாறியுள்ளது.

அவர்களைப் பற்றி வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எந்த ஆபாசமும் இல்லை. மிக இயல்பாக அந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.

சாதாரணமாக வீட்டில் எப்படி இயல்பாக இருப்போமோ, அதுமாதிரிதான் அந்த நிகழ்ச்சியிலும் இருந்தோம். இதனை ஆபாசம், கிளாமர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நான் கூச்ச சுபாவம் அதிகம் உள்ள பெண்ணாக இருந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதனை உடைத்து, தற்போது வெளியே வந்திருக்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் இருக்க வேண்டும்.

லட்சியம் என்று எனக்கு எதுவும் கிடையாது. ஆனால் எது செய்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இதுதான் எனது விருப்பம். எனக்கு என்ன நடக்கிறதோ, அதை ஏற்றுக் கொண்டு அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறேன்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சிநேகன்தான் வெற்றி பெறுவார் என்றுதான் நினைத்திருந்தேன். இதுகுறித்து எல்லோரிடமும் நான் பகிர்ந்து கொண்டேன். ஆரவ் வெற்றி பெறுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

பாக்கெட் மணிக்காகவே நான் மாடலிங் தொழிலுக்கு வந்தேன். பிறகு அதுவே எனது வேலையாக மாறிவிட்டது. கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு பயிலும்போது முதல் முதலாக மாடலிங் வாய்ப்பு வந்தது.

பிறகு அதையே தேர்ந்தெடுத்து, எனது வாழ்க்கை அவ்வாறே சென்று கொண்டிருக்கிறது. மதுரை குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால் இங்கு எனக்கு ரசிகர்கள் அதிகம்.

அவர்களின் அன்பும், ஆதரவும் என்னை பெருமை கொள்ளச் செய்கிறது. பொதுவாக அனைத்து சினிமா பிரபலங்களுக்கும் மதுரையில்தான் மன்றங்கள் முதலில் தொடங்குவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன்.

அதை நினைத்து வியந்திருக்கிறேன். தற்போது ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். எனக்கு ரோல் மாடல் என்று யாரையும் நான் நினைக்கவில்லை என்று கூறினார். – Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!