விசாகனுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் மகன் நினைவில் தவிக்கும் சவுந்தர்யா..!


சமீபத்தில் திருமணம் முடிந்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் தேனிலவு சென்ற படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கு கடந்த வாரம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனால் ரஜினியின் வீடு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திருமணத்தின் போதும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.

அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது, மகள் கைகளைப் பிடித்துக் கொண்டு ரஜினி நெகிழும் போட்டோ, மகன் வேத்தை தன் மடியில் அமர்த்தி விசாகனுடன் சவுந்தர்யா அமர்ந்திருக்கும் போட்டோ, தனுஷின் மகன் ரஜினி போலவே ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோ என பல வைரல் ஆனது.


இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் பறந்துள்ளனர் புதுமணத் தம்பதி. ஐஸ்லேந்து சென்றுள்ள அவர்கள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

உறைபனிக்கு நடுவே எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. அந்தப் புகைப்படத்தில் தனது மகிழ்ச்சியை பல ஹேஷ்டேக் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கூடவே மகன் வேத்தை அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.

சவுந்தர்யாவின் இந்தப் பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், ‘வேத்தின் மனநிலை பற்றி அதிகம் பீல் செய்திருக்கிறார். சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்தால் அவர் தனிமையில் இருப்பதாக நினைத்து விடுவாரோ என்பது அவரது கவலை.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!