பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தோழியை பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்.!

பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் களைப்படைந்த பெண் ஓய்வு எடுப்பதற்காகச் சிறிது நேரம் பெட்ரூம் சென்றுள்ளார்.

நண்பர்களுக்காக உணவு வாங்கி வர ஆரிப் வெளியே சென்ற நேரத்தில், ஆதித்யா போதையில் இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆதித்யாவும் போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு வாங்கிவந்த ஆரிப் இடம் நடந்ததை விவரித்த அப்பெண், காவல் நிலையம் சென்று ஆதித்யா மீது கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளார். காவல் துரையின் தீவிர விசாரணையின் பெயரில் ஆதித்யா மற்றும் அப்பெண் இருவருக்கும் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆதித்யா போதையில் அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கற்பழிப்பு வழக்கின் கீழ் அத்தியா கைது செய்யப்பட்டுள்ளார். ஆரிப் மற்றும் அப்பெண் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் தான் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.