சமூக வலைதளத்தில் மக்கள் செல்வனை அசிங்கப்படுத்திய விஷமிகள்…!


நடிகர் விஜய் சேதுபதி சமூகம் சார்ந்த வி‌ஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர். இதற்கு சமூகவலை தளங்களில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தனது கருத்தை துணிச்சலாக கூற அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

கடந்த 6-ந்தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது விஜய் சேதுபதி காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த ‘டிஜிகாப்’ செயலி மூலம் குறையும்’ என்றார்.

இதை பிரபல டிவி சேனல் பதிவிட்டது. அந்த பதிவில் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப் மூலம் மாற்றி சிலர் பரப்பி உள்ளனர். அதை சில சமூகவலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் வெளியிட்டன. இது சர்ச்சையானது.

என் அன்பிற்குரிய மக்களுக்கு
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
பேசவும் மாட்டேன்
சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் pic.twitter.com/40nkrbVfR5

— VijaySethupathi (@VijaySethuOffl) February 11, 2019

இதை அறிந்த விஜய் சேதுபதி தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில் டிவி சேனலில் வந்த உண்மை செய்தியையும், வி‌ஷமிகள் பரப்பிவிட்ட போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டு, ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.

எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுடன் தான் பேசிய வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளார். இதேபோல் அந்த டிவி சேனலும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வந்த செய்திகளே உண்மையானது என்று விஜய் சேதுபதியின் கருத்து அடங்கிய படத்தை ட்வீட் செய்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!