பள்ளி பேருந்தில் கியர் போட மூங்கில் குச்சி பயன்படுத்திய ஓட்டுநர் – அதிர்ச்சியில் போலீசார்..!


மகாராஷ்டிராவின் மும்பை நகரில் கார் என்ற புறநகர் பகுதியில் சர்வதேச பள்ளிக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து பள்ளி பேருந்து ஒன்று மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு சென்றுள்ளது.

அந்த பேருந்தினை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில், பேருந்து தொழிலதிபர் ஒருவரின் கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்து ஓட்டுநரிடம் தொழிலதிபர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு 2 போலீசார் வந்தனர். அவர்களிடம் பேருந்தின் ஸ்டீயரிங் வேலை செய்யாததே விபத்து ஏற்பட காரணம் என ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதனால் கார் உரிமையாளர் மற்றும் போலீசார் பேருந்தினுள் சென்றுள்ளனர். அங்கு கியர் போடும் இடத்தில் மூங்கில் குச்சி ஒன்று இருந்துள்ளது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலட்சியமுடன் செயல்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!