நோயாளிகளை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அநுபவித்த நர்ஸ் – கன்னியாகுமரியில் பரபரப்பு..!


கன்னியாக்குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்தர். இவர் திருவட்டாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் விபத்தில் சிக்கியதால் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது எஸ்தர்தான் அவரை உடனடிருந்து கவனித்து வந்துள்ளார். இதனால் ஜான்சன் எஸ்தர் இடையே காதல் மலர்ந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து ஜான்சன் டிஸ்சார்ஜ் ஆகிய பின்பும் இருவரும் தங்களின் காதலை செல்போன் மூலம் தொடர்ந்து வந்தனர். அவ்வப்போது இருவரும் இணைந்து வெளியே சுற்றுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இவர்கள் இவ்வாறு வெளியே செல்லும் போது எல்லாம் இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. மேலும் எஸ்தர் ஜான்சன் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு இவர்களது பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் திடீர் என ஜான்சனிடம் பழகுவதை எஸ்தர் நிறுத்திக்கொண்டார். மேலும் எஸ்தர் அந்த மருத்துவமனையில் இருந்து பணியையும் விட்டு விட்டார். ஜான்சன் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஜான்சனால் அது முடியவில்லை.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து ஜான்சன் மொபைலுக்கு தெரியாத நம்பரில் இருந்து சில புகைப்படங்கள் வந்தது. அதில் எஸ்தர் வேறு ஒரு ஆணுடன் தனி அறையில் இருப்பதும், மேலும் எஸ்தர் தாலி அணிந்திருப்பது போலவும் இருந்தது. இருவரும் அன்யோநியமாக இருப்பது போலவும் புகைப்படங்கள் இருந்தது.

மேலும் அதன் பின் ஒரு வாய்ஸ் மெசேஞ் வந்தது. அதில் எஸ்தர் தான் பேசினார். தான் இந்த புகைப்படத்தில் இருப்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் இனி அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் அவர் பேசியுள்ளளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன் இதே போல நாம் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏரளாமாக என்னிடமும் இருக்கிறது என எஸ்தரை மிரட்டியுள்ளார். இதையடுத்து எஸ்தர் தனது இரண்டாவது காதலனுடன் திருவட்டாரு போலீஸ் ஸ்டேஷனில் ஜான்சன் மீது புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்தியதில் எஸ்தரின் இரண்டாவது காதலன் பெயர் செல்வகுமார் என்றும், அவரும் எஸ்தர் பணிபுரிந்த அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்ததாகவும், அப்பொழுது தான் எஸ்தருக்கும் செல்வகுமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது.

இருப்பீனும் ஜான்சனுடன் எஸ்தர் செல்ல விருப்பாததால் ஜான்சனை எஸ்தர் விஷயத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படியும், ஜான்சனிடம் இருந்த அந்தரங்க புகைப்படங்களை அழித்தும் அவரை அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்ககு வந்த நோயாளிகளை காதல் வலையில் விழ வைத்து நர்ஸ் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!