எஸ்.பிக்கு நடந்த சோகம்..! கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்..!


தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களில் ஒருவர் SP பாலசுப்ரமணியம். இவரது பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார் SP பாலசுப்ரமணியம். இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பல பாடல்களை பாடியவர்களில் ஒருவர் பாடகர் SP பாலசுப்ரமணியம்.

இதுவரை பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் SP பாலசுப்ரமணியம். சிலகாலங்களாக எந்த ஒரு சினிமாவிலும் இவரது குரலை கேட்க முடியவில்லை.


இந்நிலையில், நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் எவண்டா கீழ, எவண்டா மேல என்ற பாடலை பாடினார் SP பாலசுப்ரமணியம்

இந்நிலையில் இவரது வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது இவரின் அம்மா சகுந்தலம்மா அவர்கள் நெல்லூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இறுதி சடங்கு எங்கு, எப்போது என்பது பற்றி இன்னும் செய்திகள் வெளியாகவில்லை.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!