என்னை பின்னால் கிள்ளிவிட்டு… இப்ப என்ன செய்வ – பிரபல நடிகை பகீர்..!


நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 25-ந்தேதி “மணிகார்னீகா” என்ற படம் வெளியானது. கடந்த 3 நாட்களில் ரூ.50 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் தங்களை பாதுகாக்க தற்காப்பு கலையை கற்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் ராணி முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்.

இது குறித்து கங்கனா ரனாவத் கூறியதாவது:-

”நாம் பாதுகாப்பாக உணர அடுத்தவர்கள் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரி அல்ல. நான் 16 வயதில் அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அடுத்தவர்கள் உங்களை காப்பாற்ற வேண்டும், உங்களை பாதுகாப்பாக உணர செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.

“குற்றம் செய்பவர்கள் அது தவறு என்று தெரிந்துதான் செய்கிறார்கள். திரிலுக்காக தவறுகளை செய்கிறார்கள். நான் ஒரு கூட்டத்தின் நடுவே நின்றபோது ஒருவர் என் பின்னால் கிள்ளிவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நபர் என்னை கிள்ளிவிட்டு என் கண்களை பார்ப்பது, இப்ப என்ன செய்வ! என்பது போன்று இருந்தது. அதனால் என்ன எதிர்பார்க்க முடியும்?. நம் பாதுகாப்புக்கு அடுத்தவர்களை நம்பி இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!