அந்தமான் கடலில் காற்றழுத்தம் – தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம்…!


அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக மாறியது.

முதலில் இது புயல் சின்னமாக மாறி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிக பலத்த மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகம்- சுழற்சி காரணமாக அது புயல் சின்னமாக உருவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி தொடர்ந்து காற்றழுத்த மண்டலமாக நிலைப்பெற்று ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 930 கி.மீ தொலைவிலும், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கில் 970 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த மண்டலமானது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயல் சின்னம்) மாறும் ஒடிசா-ஆந்திரா கடற்கரையை நெருங்கும் போது மெதுவாக பலவீனம் அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

புயல்சின்னம் சென்னையை நோக்கி வரும் என்றும் தமிழகத்தில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்து இருந்த நிலையில் அது திசைமாறியதால் புயல் ஆபத்து நீங்கியது.

என்றாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எண்ணூர், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு 2 நாட்ளுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் 3 வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!