கடந்த வருடம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்டார் ஆசிரியர் சிவக்குமார். இவ்வழக்கில் சிவக்குமாரின் நண்பன் அகிலன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவக்குமார், வயது 35 திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் ஆசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இவர் கடந்தாண்டு ஜனவரி 24 -ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலையில் பள்ளி அருகே குளத்தில் ரத்தக் காயங்களுடன் சிவக்குமாரின் உடல் மிதந்தது. உடலைக் கைப்பற்றி வேட்டைக்காரனிருப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரியர் சிவக்குமாரின் செல்போனை கைப்பற்றி அதிலிருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் விசாரணை செய்தனர். பின்பு அருகிலுள்ள கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.-Source: vikatan
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!